பாகம்-5
மதுவை விட போதை தரும் பழக்கங்கள்
அருமை நண்பர்களே,
பிறர்க்கும் நல்வழி காட்டும்!
அழிய புகழுடன் வாழலாம்!
அன்பை பரிமாறிக் கொள்வதும் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதும் மதுவை விட போதை தரும் பழக்கமாகும்.
ஒரு 10 நிமிடங்கள் தினமும் இந்த எளிய பழக்கத்தை செய்ய ஆரம்பித்தால் பிறகு எல்லாச் செல்லவங்களும் நம்மை தேடி வந்து சேரும்.
செடி வளர்த்தல்,பூக்கும் செடி,காய்க்கும் செடி அலங்கார செடி வளர்த்தல்... சாலை ஓரங்களில் மரம் நட்டு பராமரித்தல்.வீடுகளில் தோட்ங்களில் வாழை, மா,எலுமிச்சை போன்றவைகளை நட்டு பராமரித்தல்.
கிளி,புறா,குருவிகள்,காக்கைகள் ஆகியவற்றிற்கு உணவிடுதல்,அவை மகிழ்ந்து குளிக்க குடிக்க அகலமான பாத்திரத்தில் தண்ணீர் வைத்தல்.நாம் உணவளிக்க ஆரம்பித்து விட்டால் அவை நம் வீடு தேடி வரும்,அதன் சதம் கடுகு இனிமை தரும்.
- நாய்,பூனை,மாடு ஆகியவற்றிற்கு உணவு அளித்தல்.
- மீன் தொட்டி வளர்த்தல்.
- வேர்வை வெளியேறும் வரை உடற்பயிற்சி செய்தல்.நடத்தல்நீச்சலடித்தல்,ஓடுதல்,cycling செய்தல்.
- இசைக்கருவி வாசித்தல்.
- பிரார்த்தனை செய்தல்.
மேற் கூறியவை போன்று நம்மால் முடிந்தவற்றை செய்வதை வழக்கமாக்கி கொண்டால் இந்த நற்செயல்களே நமக்கு
நற்பெயரையும்
புகழையும்
உயர்வையும்
வெற்றியும் தரும் என்பது திண்ணம்!!!!!
உறுதி!!!!!
இப்படிக்கு,
க.சண்பகவல்லி
No comments:
Post a Comment